சனி, 21 டிசம்பர், 2013

தமிழகத்திற்கெதிராகத் தொடரும் காங்கிரசின் துரோகம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளுக்குத் தடை.

கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார்.
தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்?
கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்?
தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக்கை பார்த்ததால் நடந்த இத்துரோகத்திற்கு அவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
மறுமலர்ச்சி தி.மு.க. கஸ்தூரி ரங்கன் குழு ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. பரிந்துரைகள் வெளியானதும் வரவேற்றது. பரிந்துரைகளை நிறவேற்றக் கோரி கம்பத்தில் மக்களைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அவை அனைத்தையும் பாழாக்கி கேரள சதிக்கு உடந்தையாகி மத்திய காங்கிரசு அரசு தமிழகத்திற்குத் துரோகத்தைப் பரிசாக வழங்கியுள்ளது.
வைகோ வெல்வதும் டெல்லி செல்வதும் மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது.

தொடர்புடைய சுட்டிகள்:




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக