விசுவரூபம் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கைத்துறை அனுமதி வழங்கிய பிறகும் தடை செய்வது சரியா எனக் கேள்வியெழுப்பப்படுகிறது.
தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிவிட்டதாலேயே அனுமதியோ/தடையோ செய்ய வேண்டுமென்பது சரியல்ல.. தணிக்கை வாரியம் மத்தியில் ஆளும் கட்சியினரால் நிரப்பப் படுகிறது.
மத்தியில் காங்கிரசு அரசு எண்ணற்ற வழிகளில் தமிழின விரோதச் செயல்களைப் பகிரங்கமாகச் செயல்படுத்திக் குழிபறித்த பின்னரும், இன்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காங்கிரசுக் கட்சியில் ஊருக்கு இரண்டு காங்கிரசு கயவர்கள் கதர் சட்டையுடன் வலம வாருகின்றனரென்றால் இது போன்ற மத்திய அரசால் நியமிக்கப்படும் வாரியத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளைக் குறிவைத்துதான்.
தணிக்கைத் துறை மட்டுமல்ல மத்திய அரசின் கீழ் ஆயிரக்கணக்கான வாரியங்களும், வாரிய உறுப்பினர்பதவிகளும் உள்ளன. அவையனைத்தும் ஆளும் காங்கிரசு மற்றும் திமுகவினருக்கு பங்கு வைக்கப் படுகின்றன.
இதுபோன்ற பதவிகள் மூலம் எந்தப் பதவிக்கும் பொருத்தமற்ற குறிப்பிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மாதாமாதம் ஊதியம் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் தண்டமாக அழப்படுகிறது. லஞ்சம் ஊழலிலே கரைகண்ட கட்சிக்காரர்கள் சும்மாயிருப்பார்களா? விதிமுறைகளைப் புறந்தள்ளி எடுக்கப் படும் ஆபாசத்திரைப்படங்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு சான்றிதழ் வழங்குகிறார்கள். நல்ல முறையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்குக் கூட உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்காமல் தாமதப் படுத்தி பிறகு ”உரிய முறையில் கவனித்த” பிறகு சான்றிதழ் வழங்குகிறார்கள்.
ஆக ஒரு திரைப்படத்திற்கு "A" "U" அல்லது ”U/A” சான்றிதழ் வழங்கப்படுவதில்லை தயாரிப்பாளர்களால் ”வாங்கப்படுகிறது”
விசுவரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்ட பிறகு தணிக்கைத் துறையின் முறைகேடுகளை தோண்டி வெளிக்கொண்டு வந்து விடுவார்கள் என எண்ணிப் பயந்த காரணத்தினாலேயே மத்தியில் ஆளும் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மணீசு திவாரி சம்மனே இல்லாமல் ஆஜராகி தணிக்கைத் துறை அனுமதி குடுத்த திரைப்படத்தைத் தடை செய்யக்கூடாது என கருத்துத் தெரிவித்துள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.
தணிக்கை வாரியம் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அவர்கள் முறைகேடான வழியில் பணம் சேர்க்கவே பயன்படும். அதன் மூலம் வாங்கப்படும் எந்தச் சான்றிதழுக்கும் அத்துணை மதிப்பிருக்கப்போவதில்லை.
ஒன்று தணிக்கை தேவையில்லை எனும் நிலை வரவேண்டும் அல்லது தணிக்கை வாரியம் தனி அமைப்பாகச் செயல்படுத்தப் பட்டு சீர் செய்யப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக