ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருணாநிதி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அதை நியாயப் படுத்த என்ன காரணம் சொல்வார்?




OPTIONS:

A) பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியல்ல. தி.மு.க. தீண்டாமைக்கு எதிரான இயக்கம்.


B) பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோமே தவிர நாங்கள் மோடியை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்றுச் செல்லும் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்து வாக்களித்தாலும் விவாதங்களில் ஆதரிக்க மாட்டார்கள்.

C) கடந்த பத்தாண்டுகளாக எவ்வாறு முந்திக்கொண்டு காங்கிரசோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க போன்ற பிற கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடுத்தோமோ அதே வகையில் இப்போதும் பிற கட்சிகள் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதைத் தடுக்கவே தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் இவ்வாறு பா,ஜ,கவோடு கூட்டணி வைக்கவில்லையெனில் வேறு கட்சிகள் கூட்டணி வைத்து அதனால் ஜனநாயகத்திற்குப் பெரும் தீங்கு விளைந்திருக்கும் என்பதை நாடறியும். ஏடறியும்.

D) குஜராத்திலே மதக்கலவரங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மோடியோ குஜராத்திலே முதல்வராக இருக்கிறார். நாம் குஜராத் சட்டசபையிலே சென்று அவரைக் கேள்விகேட்க நமக்கு அங்கே உறுப்பினர்கள் இல்லை. ஆகவே, மோடியைப் பிரதமரானால் அதன்மூலம் அவர் நாடாளுமன்றத்தில் அமருகிற நிலை உருவாகும். நாடாளுமன்றத்திலே இருக்கும் நம் கழக உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக குஜராத் மதக்கலவரங்கள் குறித்து கேள்வி கேட்கிற வாய்ப்பு ஏற்படும் என்கிற உன்னத நோக்கத்தினாலேதான் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துள்ளோம்.

E) டெசோ அமைப்பிலே காங்கிரஸ் பங்குபெறாததைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து வெளியேற முடிவெடுத்தோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் டெசோ அமைப்பிலே அவர்கள் சேர வாய்ப்பிருக்கிறது என்கிற உறுதிமொழியை அவர்கள் எதிர்காலத்திலே வழங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்கு இல்லாமலில்லை. அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்தக் கூட்டணி அமையவிருக்கிறது.

F) காங்கிரஸ் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அந்தந்த ஊழல்கள் தொடர்பாக ஆங்காங்கே விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருவதாக கழக உடன்பிறப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்ட தகவல்கள் நம் பொதுச்செயலாளர் மற்றும் நம் பொருளாளர் அவர்கள் கவனத்திற்கும் எடுத்துவரப்பட்டு அதே தகவல்கள் நம் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் விவாதிக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டு இருக்கிற சூழலிலே நாம் இன்னமும் காங்கிரஸ் கூட்டணியிலே தொடர வேண்டுமா? என்கிற கேள்விகள் எழாமலிருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் அதனைப் புறந்தள்ளிவிடவும் வழியின்றி ஒரு முடிவெடுத்திட வேண்டிய காலகட்டத்தில் நம் கழக கண்மணிகளாம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பொய்யான குற்றசசாட்டுகளின் அடிப்படையிலே சிறையிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலைகளையும் கருத்திலே கொண்டு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் அதற்கு மாற்று என்கிற வகையிலே வேறு எந்தத் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கமுடியும் என்கிற பல்வேறு விவாதங்கள் நடைபெற்று அதிலே என்னென்ன முடிவுகளெடுக்கப்பட்டன என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதென எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதே கழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதெனக் கருதி பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

G) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.

1 கருத்து: